வியட்நாமில் இருந்து நாடு திருப்பியவர்களிடம் CID யினர் வாக்கு மூலம் பெற்று வருகின்றனர்!


வியட்நாமில் மீட்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 151 இலங்கையர்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  இரவு விசேட விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளனர்.

அவர்களிடம் தனிப்பட்ட வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட 303 இலங்கையர்களையும் மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்ட நிலையில் அவர்களில் 151 பேர் வியட்நாமில் இருந்து இலங்கைக்கு திரும்புவதற்கு உடன்பட்டதையடுத்து இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். 

அதேவேளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்ட முயற்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு இலங்கையர்கள் தமது உயிரை மாய்க்க முயற்சித்த நிலையில் யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments