அரியாலையில் இளைஞன் மீது வாள் வெட்டு!
குடைக்குள் வாளை மறைத்து எடுத்து வந்து வீதியில் சென்ற இளைஞன் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.
யாழ்ப்பாணம் அரியாலை தபால் கட்டை சந்திக்கு அருகில் நேற்று (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாள் வெட்டில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment