யாழில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம் - இளைஞன் மீது வாள்வெட்டு!


சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பலாலி வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த மூன்றுபேர் கொண்ட குழு இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது.

குறித்த இளைஞன் தனியார் விடுதி ஒன்றில் காவலராக கடமைபுரிந்து வரும் நிலையில், கடமையில் ஈடுபட்டிருந்தவேளை இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

பத்தமேனி - அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் சிந்துயன் என்ற இளைஞனே குறித்த சம்பவத்தில் வாள்வெட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்தி: பு.கஜிந்தன்

No comments