ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தமிழ்நாட்டில் தஞ்சம்!


அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட பலநூற்றுக்கணக்கானோர் படகுமூலம் சென்று இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு ஏதிலிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

அந்தவகையில் இன்று திங்கட்கிழமை காலை திருகோணமலையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று படகு மூலம் இந்தியா சென்று தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் ஆகியோரே இவ்வாறு ஏதிலிகளாகச் சென்றுள்ளனர்.

தமிழக காவல்துறையினர் அவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (க)

No comments