யாழ்.கச்சாயில் வீதியால் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு


யாழ். கச்சாய் வீதியால் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலி உட்பட பெறுமதி வாய்ந்த  கைத்தொலைபேசி என்பன அபகரித்து செல்லப்பட்டுள்ளது.

 இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை மதியம் கச்சாய் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

உந்துருளியில் வந்த இரண்டு பேர் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி கொள்ளையிட்டதுடன், அவரது கைப்பையினையும் அபகரித்து சென்றுள்ளனர்.

குறித்த கைப்பையில் ஏடிஎம் அட்டை மற்றும் பெறுமதியான கைது தொலைபேசி இருந்துள்ளதாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். (க)

No comments