யாழில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஞாபகார்த்த மதிப்பளிப்பு விழா
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyt5KXUVCztNpdU-OU9OfJyGpV0AosdgJyVvA1d_6Jgqdv48bf_vb3jodTfforIw86Bxf_39Hd15MLsFwFEZqBCXLy_-tAV6Qb1ram3M9LitQNjzoECVqPjLlNxbYEqPQ1f19OnggFhYRsl6SXagnDb3VPFfHmslQup52WYpFI1X6S0BRjhMcWmzuoSQ/s1600/20221023_172709.jpg)
யாழில் இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில், தியாக தீபம் திலீபனின் ஞாபகர்த்த போட்டிகளின் மதிப்பளிப்பு விழா
இடம்பெற்றிருந்தது.தியாக தீபம் திலீபனை நினைவு கூரும் வகையில் தீபம் ஏற்றி, அகவணக்கத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டு இந்நிகழ்வானது ஆரம்பிக்கப்பட்டிருந்தது .
இதன்போது போட்டிகளில் பங்குபற்றிய சிறார்களுக்கான பரிசில்களையும், சான்றிதழ்களையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் கஜேந்திர குமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், பெற்றோர், சிறுவர்கள், கட்சியின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். (க)
Post a Comment