மியான்மார் சிறையில் பொதிகுண்டு வெடிப்பு: 8 பேர் பலி!!


மியான்மார் நாட்டில் அமைந்துள்ள சிறைச்சாலையில் பொதி குண்டு வெடித்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.

மியான்மர் நாட்டின் யாங்கூனிலுள்ள மிகப்பெரிய சிறையிலேயே இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

நேற்றும் புதன்கிழமையன்று சிறைக்கு வந்த பொதிகளை ஊழியர்கள் பிரித்து பார்த்த போது, அதிலிருந்த குண்டுகள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.

இதில் சிறைத்துறை அதிகாரிகள், கைதிகளை பார்க்க வந்த பார்வையாளர்கள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்த நிலையில், 18 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு மியான்மரின் இராணுவ ஆட்சி எதிர்ப்புக் குழு பொறுப்பேற்றுள்ளது.

No comments