இந்தியாவில் தடை:இலங்கைக்கு இல்லையாம்!



இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கடலட்டை தொழிலுக்கு இலங்கையின் வடபகுதியில் இந்திய முதலீட்டாளர்கள் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

இந்திய அரசாங்கம் சுற்றுச்சூழலை கருத்திற்கொண்டு இந்தியாவில் கடலட்டை பிடிப்பதற்கும் வளர்ப்பதற்கும் தடை விதித்துள்ளது.

ஆனால் கடந்தவாரம் மன்னார் ஒலைத்தொடுவாய் பகுதியிலுள்ள கடலட்டை உற்பத்திக் குஞ்சு நிலையத்தில் இந்திய முதலீட்டாளர்கள் தொழில்நுட்ப உதவிக்காக வருகை தந்துள்ளனர்.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கடலட்டை தொழிலுக்கு இலங்கையின் வடபகுதியில் இந்திய முதலீட்டாளர்கள் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தொழில்நூட்ப முறைகளை இலங்கையின் வடபகுதியில் அமல்படுத்துவதை வடபகுதி மீனவர்கள் விரும்பவில்லை.

இந்திய அரசு மற்றும் இந்திய துணைத் தூதரகம் என்பன கடலட்டை சார்ந்த தொழில்நுட்பங்களை வடக்கில் அமுல்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென கோரியுள்ளனர்.


No comments