கலாமின் மணல் சிற்பம் காரைநகரில்!



இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அமரர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் மணல் சிற்பம் காரைநகரிலுள்ள கசூரினா கடற்கரையில் உருவாக்கப்பட்டது.

அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிலையில் வேலணையைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுப்பிரமணியம் சுகுமாரால் அப்துல் கலாமின் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், காரைநகர் பிரதேச சபை தவிசாளர் க.பாலச்சந்திரன், இந்திய துணை தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments