சகல வசதிகளுக்காக சுமார் ஆயிரம் ரூபா?



இலங்கை பாராளுமன்றத்தில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் தேநீருக்கான கட்டணம் நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஊடகவியலாளர்களின் தேநீருக்கு ரூ.25 வசூலிக்கப்பட்டது. தற்போது அந்த தொகை ரூ.100 ஆக உயர்த்தப்படவுள்ளது. பாராளுமன்ற ஊழியர்களுக்கு மாதம் முழுவதும் உணவு, தேநீர் மற்றும் சகல வசதிகளுக்காக சுமார் ஆயிரம் ரூபா அறவிடப்படும் வேளையில் ஊடகவியலாளர்களின் தேநீருக்கான கட்டணம் நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

ஊடகவியலாளர்களுக்கான மதிய உணவின் விலையும் கடந்த மாதத்திலிருந்து நூற்றைம்பது ரூபாவாக அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments