பூநகரியில் பெற்றோரும் உண்ணாவிரதத்தில்!


 

சிறைகளில் உண்ணாவிரத போராட்டத்தை தொடரும் தமது பிள்ளைகளிற்கு ஆதரவாக பெற்றோரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.

பூநகரி முட்கொம்பன் பகுதியிலுள்ள தங்களது வீடுகளில் குடும்பங்கள் இணைத்து இன்று முதல் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

முன்னதாக வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்னதாக குடும்பங்கள் உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்திருந்த போதும் அம்முயற்சி வெற்றி பெற்றிருக்கவில்லை.




No comments