ஜக்கிய தேசியக்கட்சி திறந்திருக்கிறது?



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது பற்றியோ அல்லது வேறு எந்தப் பதவியில் சேர்வது பற்றியோ எந்த விவாதமும் நடைபெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் இல்லை. கோட்டாபய ராஜபக்ஷ அரசியலில் இருப்பதா இல்லையா என்பதை அவர் இன்னும் தீர்மானிக்கவில்லை” என  அவர்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரையை தொடர்ந்து ராஜபக்சே மீண்டும் இலங்கை வர அனுமதிக்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஐக்கிய தேசியக் கட்சி தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் இணைவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், துன்பங்களிலிருந்து மக்களை விடுவிக்கவும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைவது அவசியம் என்றும் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.


No comments