நோர்வேயில் மரப்பாலம் இடிந்து விழுந்தது: இருவர் உயிருடன் மீட்பு


நோர்வேயின் தெற்குப் பகுதியில் மரப்பாலம் இடிந்து விழுந்தததில் அப்பாலத்தில் பயணித்த இருவர் ஆற்றில் விழுந்த நிலையில் இருவரும் உயிருடன் மீட்கப்பட்பட்டனர்.

ஓயர் (Øyer) நகரத்தில் இந்த விபத்து இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணியவில் நடந்தது.

மரப்பாலத்தின் ஊடாகப் பயணித்த மழுந்து ஒன்றும் பாரவூர்த்தியும் ஆற்றில் விழுந்தன. மகிழுந்து ஆற்றில் மூழ்கியது. பாரவூர்தி செங்குத்தாக விழுந்து கிடந்தது. 

இரு வாகனங்களிலிருந்தும் ஓட்டுநர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர் என காவல்துறையினர் அறிக்கையில் தெரிவித்தனர்.

ஏறக்குறைய 150 மீட்டர் நீளமுள்ள பாலம் குட்பிரண்ட்ஸ்டல்ஸ்லாகன் ஆற்றின் மேற்குக் கரையையும் ட்ரெட்டன் கிராமத்தையும் இணைக்கிறது. இது 2012 இல் திறக்கப்பட்டது, சரிவுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

நோர்வே ஆட்டோமொபைல் ஃபெடரேஷன், பாலம் 2021 இல் சரிபார்க்கப்பட்டதாகக் கூறியது. தற்போது அத்தகைய பாலங்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுப்பப்படுகிறது.

No comments