'கோட்டா கோ ஹோம்' பிரான்ஸ் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர் கைது!


கோட்டா கோ ஹோம் போராட்டப் பிரச்சாரத்திற்கு ஆதரவாக பாரிசில் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்ட நபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பிரான்ஸில் வசிக்கும் அர்ஜுன அமடோரு, இலங்கையில் உள்ள தனது குடும்பத்தினரை சந்திக்கச் சென்றபோது, ​​நிட்டம்புவ காவல்நிலைய அதிகாரிகளால் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

பிரான்சில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக சில சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், நிட்டம்புவையில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டதாக நிட்டம்புவ காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வன்முறையின் போது சந்தேக நபர் இலங்கையில் இருந்ததாகவும், அவர் பின்னர் பிரான்ஸ் சென்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

குறித்த நபர் மீண்டும் சனிக்கிழமை இலங்கைக்கு பயணம் செய்திருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments