22ஆம் திருத்தச் சட்டமூலம், இன்று!



இலங்கை  அரசியலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்டமூலம், இன்றைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவினால், இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், கொள்கைப் பிரகடன உரை தொடர்பான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

No comments