ஒருபுறம் கதிரை பேரம்:மறுபுறம் வழக்கு!
வடகிழக்கில் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியை கைப்பற்ற இலங்கை தமிழரசுக்கட்சி தேசிய மக்கள் சக்தியுடன் பேச்சுக்களை திரைமறைவில் முன்னெடுத்துவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.யாழ்.மாநகரசபையின் முதல்வர் பதவியை தேசிய மக்கள் சக்திக்கு விட்டுத்தருமிடத்து பதிலிற்கு ஏனைய சபைகளில் ஆட்சியமைக்க தேசிய மக்கள் சக்தி தமிழரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைமை தொடர்பான எம்.ஏ.சுமந்திரனின் வழக்கு நீண்டுசெல்கின்றது.இந்நிலையில் புதிய தலைவர் சி.வி.கே.சிவஞானம் எதிர்வரும் வழக்குத் திகதியில் தனது பதிலியை சமர்ப்பிக்க வேண்டும் என இன்று (04) நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் தலைமைப்பதவிக்கான வழக்கானது திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கின் இறுதியில் செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன், ”தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராஜாவின் மறைவுக்குப் பின்னர் அவருக்குப் பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.அக் காரணத்தினால் அவரை வழக்கிலே முதலாவது எதிராளியாக பதிலீடு செய்துகொள்வதற்கே இன்றையதினம் வழக்கு அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
Post a Comment