தப்பித்து செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது!


பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்குச் செல்வது தொடர்கின்றது.

சுமார் ஏழுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் தஞ்சமடைந்திள்ளதாக கிடைத்த தகவலையடுத்து இலங்கை தமிழர்களை மீட்க மரைன்  பொலிஸார் விரைந்துள்ளனர்

இதனிடையே இலங்கையில் இருந்து உயிர் பிழைக்கும நோக்கில்  இந்தியாவிற்கு இன்று அதிகாலையும்  8 பேர் தப்பிச் சென்றனர்.

இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார்  மாவட்டங்களில்  இருந்து தமிழகம் நோக்கி படகில் ஏற்றிச் செல்லப்பட்ட 8பேரை  இலங்கை படகு தனுஸ்கோடியில்  இறக்கி விட்டுத் திரும்ப்பிய நிலையிலேயே 8 பேரையும் தமிழக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2  குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரில் 2 பெண்கள் மற்றும் 5  சிறுவர்கள் மற்றும் ஒரு ஆண்  அடங்குகின்றனர்.

No comments