இது குடிமக்களை ஒடுக்குவதற்கான நேரம் அல்ல - அமெரிக்கத் தூதுவர்
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ஒரே இரவில் தேவையற்ற மற்றும் ஆழ்ந்த கவலைக்குரிய வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதாகத் தெரிவித்தார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து தனது கவலைகளை வெளிப்படுத்தியதாகத் தெரிவித்தார்.
ஒரே இரவில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட தேவையற்ற வன்முறைகள் குறித்தே தனது கவலையை தெரிவித்தார்.
சிறந்த எதிர்காலத்திற்கான இலங்கையர்களின் அழைப்புகளுக்கு பதிலளிக்க ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்கும் ஒரு சந்தர்ப்பமும் கடப்பாடும் இருப்பதாக அவர் கூறினார்.
இது குடிமக்களை ஒடுக்குவதற்கான நேரம் அல்ல, மாறாக மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் அரசாங்கம் எடுக்கக்கூடிய உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எதிர்நோக்குவதற்கு இது நேரமில்லை என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
Post a Comment