உக்ரைன் தாக்குதலில் 40 உக்ரைனியப் போர்க் கைதிகள் உயிரிழப்பு


பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் ஒலெனிவ்காவில் உள்ள சிறைச்சாலையில் உக்ரேனியப் படைகள் நடத்திய ரொக்கட் தாக்குதலில் 40 உக்ரேனிய போர் கைதிகள் கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 75 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அத்துடன் இத்தாக்குதல்கள் அமெரிக்கா வழஙகிய ஹிமார்ஸ் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலை உக்ரைன் இராணுவம் மறுத்துள்ளது. அத்துடன் இத்தாக்குதலை ரஷ்யாவே நடத்தியதாக குற்றம் சாட்டியது. அந்த இடத்தில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை மறைக்க ரஷ்யா முயல்வதாக உக்ரைன் கூறியது.

No comments