எரிபொருள் வரிசை:மாஸ்க் கட்டாயமாம்



இரவு பகலாக மக்கள் எரிபொருளிற்கு அலைந்து திரிகையில் கிளிநொச்சியில் வரிசைக்கு மாஸ்க் கட்டாயமென அறிவிக்கப்பட்டுள்ளது

நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள, கொரோனா தொற்று நிலைமை காரணமாக, மக்கள், ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், எரிபொருள் நிரப்ப காத்திருப்பவர்கள், கொரோனா தொற்றில் இருந்து தங்களை காத்துக்கொள்ள, முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

இன்று, கிளிநொச்சியில் வைத்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments