முதியவர் சடலமாக மீட்பு


வாளைச்சேனை வீ.சீ மைனாத்தின் ஓரத்தில் உயிரிழந்த நிலையில் 69 வயதுடைய வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் செங்கலடி - கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த பிள்ளையான் காணேசமூர்த்தி என்பர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் பொருளாதார நெருக்கடி காரணமாக வீட்டிலிருந்து ஆறு நாட்களுக்கு முன்னர் வெளியேறிச் சென்றுள்ளார் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபரின் உடற்கூறு ஆய்வுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments