படகு மூலம் தப்பிக்க முயன்ற 38 பேர் கைது ?


இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்ரோலியாவுக்கு செல்ல முயன்ற 36 பேரை தென்கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இன்று அதிகாலையில் கைது அம்பாறை- பாணம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர்கள் நீர்கொழும்பில் இருந்து இயந்திர படகு ஒன்றில் ஊடாக, நாடைவிட்டு வெளியேற முயன்றபோதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு, யாழ்ப்பாணம். மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்வர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவை நோக்கி படகில் செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில், கடந்த 9ம் திகதி அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 45 தஞ்சக்கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் இலங்கையிலிருந்து படகு வழியாக அவுஸ்திரேலியாவுக்கு வர முயன்று கிறிஸ்துமஸ் தீவு அருகே இடைமறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம், இப்படகு எப்போது அவுஸ்திரேலியா கடல் பகுதிக்குள் நுழைந்தது என்பது தெரியவில்லை. 




No comments