மோசமாகிறது நிலைமை:செல்வமும் ஆலோசனை



இலங்கையில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் சிறார்களின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கலாம் என வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.

எனவே, சிறுவர்களின் ஊட்டச்சத்தில் அதிக கவனம் செலுத்துமாறு பெற்றோர்களிடம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனிடையே பசளையை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு கொடுக்கின்ற போது, கஞ்சியாவது குடித்து மக்கள் வாழ்வார்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் சேமித்து வைத்த அரிசிகள் அனைத்தும் இரண்டு , மூன்று மாதங்களில் முடிவடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. 

இனிவரும் காலங்களில் பட்டினிச் சாவு வருவதற்கான வாய்ப்புகளே கூடுதலாக உள்ளது. 

சாதாரணமாக உழைக்கின்ற அன்றாட கூலி செய்கின்ற மக்களுடைய நிலைமை மிகவும் மோசமாக, பரிதாபமாக இருக்கின்றது. 

அரசாங்கம் முதலிலே பசளையை இறக்கி விவசாயிகளுக்கு கொடுக்கின்ற போது கஞ்சியாவது குடித்து மக்கள் வாழ்வார்கள்.

பசளை கிடைக்கின்ற போது ஓரளவிற்காவது பட்டினியை நிவர்த்தி செய்கின்ற வாய்ப்புகளை உண்டு பண்ணலாம் என்பது எனது ஆலோசனை என மேலும் தெரிவித்தார். 

No comments