முகத்திலடி:சிங்கள மக்களிற்கு மருந்து வாங்க பணம்!



 குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் தனது நிலுவைத் தொகையை இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக வழங்க தீர்மானித்துள்ளார்.

கடந்த வாரம், டொக்டர். ஷாபி சிஹாப்தீனின் காலதாமதமான ஊதியத்தை 2022 ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு ஒப்புக்கொண்டது.

அமைச்சகம்  2.67 மில்லியன் நிலுவைத் தொகை, காசோலையை வழங்கியுள்ளது. இது நாட்டில் உள்ள மருந்துப் பற்றாக்குறையைத் தணிக்க டாக்டர் ஷாபி அவர்களால் நன்கொடையாக வழங்கப்படுகிறது.

சம்பள நிலுவைகளில் அடிப்படை சம்பளம், இடைக்கால கொடுப்பனவு, வாழ்க்கைச் செலவு மற்றும் கலாநிதி ஷாபி சிஹாப்தீனுக்கு விதிக்கப்பட்ட கட்டாய விடுப்புக் காலத்திற்கான ஓய்வூதியத்திற்குப் பதிலாக கொடுப்பனவு ஆகியவை அடங்கும்.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் சட்டவிரோத கருத்தடை சத்திரசிகிச்சைகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் வைத்தியர் சிஹாப்தீன் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார்.

பெண்களின் அனுமதியின்றி கருத்தடை செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

கலாநிதி சிஹாப்தீன் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவித்ததாகவும், பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் கலாநிதி சிஹாப்தீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) 2019 ஜூலை மாதம் குருநாகல் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

பின்னர் குருநாகல் பிரதான நீதவான் கலாநிதி ஷாபி சிஹாப்தீன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

No comments