முள்ளிவாய்காலில் கிணறு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு


முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம், நேற்று செவ்வாய்க்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதுடைய கே.பிரதீப் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடற்றொழில் நடவடிக்கைக்காக முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சடலம் தொடர்பில் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வருகை தந்த முல்லைத்தீவு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments