இலங்கை:அரச ஊழியருக்கு ஒன்றுமில்லை!



இலங்கையில் அடுத்து வரும் வாரங்களில் பிரதமரும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால்  முன் வைக்கப்பட இருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட இருப்பதாக வெளியான செய்தியை பிரதமர் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது. 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை. சமர்ப்பிக்கப்படவிருக்கும் இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தில் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ள அதே நேரம் , சுகாதாரம் மற்றும் கல்வியை தவிர அனைத்து அமைச்சுகளுக்குமான ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் எனவும் பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

No comments