முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்த்த முஸ்லீம்கள்!



முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 13வது நினைவு ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாண முஸ்லிம் மக்களினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இடம்பெற்றது.

ஐக்கியத்திற்கான யாழ் முஸ்லிம் சமூகத்தினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இடம்பெற்றது.

இதனிடையே தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்டுவந்திருந்த வாகன கவனயீர்ப்பு ஊர்தி இன்று முள்ளிவாய்க்காலை சென்றடைந்துள்ளது.




No comments