மகிந்த ராஜினாமா!பயனில்லை சுமந்திரன்!



பிரதமர்  பதவியிலிருந்து ராஜினாமா செய்ய மகிந்த முன்வந்துள்ளார்.நாளை 4ம் திகதி உத்தியோகபூர்வமாக தனது பதவி விலகல் பற்றி மகிந்த அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே மகிந்தவின் சகாவான சுமந்திரன் பிரதரமர் மாற்றத்தால் பயனில்லையென தெரிவித்துள்ளார்.

“தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலையில், யார்புதிய  பிரதமராக வந்தாலும் நாட்டில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படப் போவதில்லை” என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 “நாட்டில் பிரதமரை மாற்ற வேண்டும் என்று ஒரு குழுவினர் விடாப்பிடியாக நிற்கின்றார்கள். நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

“தற்போது பிரதமர் பதவி விலகினால், புதிய ஒருவர் பிரதமராக வருவார். அவருடன் ஒரு புதிய அமைச்சரவை உருவாகும். அந்த அமைச்சரவையை உருவாக்குவதற்கு ஐவர் கொண்ட குழுவை உருவாக்கி உள்ளார்கள்.


“அந்த ஐவர் கொண்ட குழுவில் உள்ளோர் எமக்கு திருப்தியில்லை. அவ்வாறான நிலையில், பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதன் மூலம் நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.


 “பிரதமர் பதவி விலகினாலும்  ஜனாதிபதி அவ்வாறே இருப்பார். அவருடன் இணைந்து உருவாகும் புதிய அமைச்சரவை தற்போதுள்ள அமைச்சரவையை விட மிகவும் கொடூரமான அமைச்சரவையாக இருக்கும்.


“எனவே, நாட்டில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஒரே நாளில் கொண்டு வந்து, நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதன் மூலமே நாட்டில் ஏதாவது மாற்றம் ஏற்படும்.


 “நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய நிலையில் கூட்டமைப்பு உள்ளோம். எனினும், அந்த விடயம் தொடர்பில் நாங்கள் அனைத்துக் கட்சிகளுடனும் ஆராய்ந்து முதல்கட்டமாக ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம்” என்றார்.

No comments