கோத்தாவிற்கு கொடி பிடி - தூதுவர் பதவி!



தேர்தல் காலத்தில் கோத்தாவிற்கு கொடி பிடித்தமைக்காக தூதுவர் பதவிகளை அள்ளி வீசுகிறது கோத்தா அரசு.

 இலங்கையின் நகைச்சுவை நடிகர் பந்து சமரசிங்கவுக்கு, இத்தாலியின் உயர்ஸ்தானிகர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறைந்த இசைக் கலைஞர் நீலா விக்ரமசிங்கவின் பதவி சமரசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சேவையில் எவ்வித முன் அனுபவமும் இல்லாத இலங்கையின் நகைச்சுவை நடிகரான பந்து சமரசிங்க, 2019 ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக செயலாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments