பேச்சுக்கு கூப்பிடுகிறார் கோத்தா!



ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பதினொரு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இலங்கை ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சுயாதீன குழுவாக செயற்பட் தீர்மானித்த நாடாளுமன்ற உறுப்பினர்களையயே ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
இன்றுமாலை இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
குறிப்பிட்ட குழுவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்த யோசனையை முன்வைத்திருந்தனர்.
இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காகவே ஜனாதிபதி அவர்களிற்கு அழைப்புவிடுத்துள்ளார்.

No comments