மேலும் இருவர் தமிழகத்தில் அடைக்கலம்!



இலங்கையில் இருந்து மேலும் 2 இலங்கை தமிழர்கள் ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர்.

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை, கடுமையான விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் உயிர் வாழ முடியாத இலங்கை தமிழர்கள், தமிழகம் நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், இன்று ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்த புதுக்குடி கடற்கரையில் இலங்கையில் இருந்து படகு மூலம் இரண்டு பேர் சென்றடைந்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, மெரைன் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது யாழ்ப்பாணம் மாவட்டம் குருநகர் பகுதியை சேர்ந்த சீலன் மற்றும் அருள்ராஜ் என இருவர் அகதிகளாக வந்திருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் மெரைன் போலீசார் தொண்டி மெரைன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுவரை இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் இன்று வரை 77 பேர் அகதிகளாக வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் விசாரணைக்கு பின் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

No comments