அனைத்துலகப் பெண்கள் நாள்: பிரான்சில் தமிழ்ப் பெண்கள் பங்கேற்பு

பிரான்சில் அனைத்துலக பெண்கள் நாளான இன்று அனைத்துலக பெண்களின் கவனயீர்ப்புப் பேரணி பாரிஸ் நகரில் இடம்பெற்றது.

பாரிஸ் Gare de nord பகுதியில் இருந்து ஆரம்பித்த பேரணி Paris Gambetta நகர் வரை இடம்பெற்றது.

இப்பேரணியில் குர்திஸ்தான் பெண்கள் அமைப்பினருடன் பிரான்சு தமிழ்பெண்கள் அமைப்பினரும் இணைந்து தமிழீழத் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு எழுச்சிகொண்டிருந்தனர்.

இப்பேரணியில் கலந்துகொண்ட தமிழ் பெண்கள் அமைப்பினருக்கும் தமிழீழ மக்களுக்கும் குர்திஸ்தான் மக்களின் சார்பில் ஒலிபெருக்கியில் நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், தமிழீழ மக்களின் விடுதலைப் பயணத்தில் தமது ஆதரவு எப்போதும் இருக்கும் என அவர்கள் உணர்வு பொங்கத் தெரிவித்திருந்தனர்.

வெளிநாட்டு மக்களுக்கு பிரான்சு தமிழ்பெண்கள் அமைப்பினரின் பிரெஞ்சு மொழியிலான துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. 

No comments