600 -இறக்குமதி தடை!



இலங்கையில் 600 அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதை தடைசெய்வதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் உதயகம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை முன்னுரிமைகளை அடையாளம் காணவேண்டியநிலையில் உள்ளது,வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைவடைந்தால் மருந்துகள் எரிபொருட்கள் கைத்தொழிலுக்கான மூலப்பொருட்கள்போன்றவை மாத்திரம் அத்தியாவசிய பொருட்களை கருதப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதிகளை புறக்கணிக்காததன் விளைவையே இலங்கை தற்போது எதிர்டிகொள்கின்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

600 அத்தியாவசியப்பொருட்களை நாட்டிற்குள் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் நடவடிக்கைகளில் திறைசேரி ஈடுபட்டுள்ளதுஎன அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தாமதமான முடிவுதான் என்றாலும் நாங்கள் மகிழ்ச்சியடையலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments