வானத்தில் பறக்கிறது இலங்கையில் எரிபொருள்!



லங்கா ஐ.ஓ.சி தமது எரிபொருள் விலையை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் டீசல் லீற்றருக்கு 15 ரூபா வீதமும் பெற்றோல் விலை லீற்றருக்கு 20 ரூபா வீதமும் அதிகரித்துள்ளது.

 எனினும் எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்  இதுவரை தீர்மானம் எதையும் எடுக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் கடந்த 6 ஆம் திகதியும் எரிபொருள் விலையை அதிகரித்திருந்தது.

எனினும் இலங்கை கனிய கூட்டுதாபனத்தின் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இதுவரையில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. 

No comments