22 தமிழக மீனவர்கள் கைது!


 இலங்கையின் காங்கேசன்துறை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டிய மீன் பிடியில் ஈடுபட்ட  22  தமிழக மீனவர்களையும் இரு விசைப் படகுகளையும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்தில்   கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இன்று  அதிகாலை  மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்படவுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட  தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம்  நீர் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இதில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட 9 மீனவர்கள் தொடர்பான செய்தி முன்னர் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments