இலங்கை தனிநாடு:இந்தியா பொருட்டல்ல!





இந்தியாவின் ஒரு மாநிலம் இலங்கை இல்லை. இது தனிநாடாகும். ஆகையால், இந்தியாவிற்கு அனுப்பும் கடிதத்தைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லையென்கிறார் அமைச்சர் உதய கம்மன்பில,

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்க் கட்சிகள் சில இணைந்து, கடிதமொன்றை தயாரித்திருந்த நிலையில் அக்கடிதம், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் நேற்று (18) கையளிக்கப்பட்டது.

இந்நிலையில், அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், இந்தக் கடிதம் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அப்போதே “ எம்முடன் பேசாமல் எங்குச் சென்று பேசினாலும் அதில் பலன் இல்லை. இந்தியாவின் ஒரு மாநிலம் இலங்கை இல்லை. இது தனிநாடாகும். ஆகையால், அந்தக் கடிதத்தைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


No comments