ஆரியகுளம் யாழ்.மாநகரசபைக்கே சொந்தம்!

 




ஆரியகுளம் யாழ்.மாநகரசபைக்கு சொந்தமானதென்பது உறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் ஆரியகுளத்தின் உரித்து தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் மாநாகர சபையின் ஆணையாளரிடம் எழுத்தில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராயா கோரிக்கை விடுத்திருந்தார் .

அத்துடன்  ஆரியகுளத்தின் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்திருந்தார். இதனால் ஆரியகுளம் அமைக்கும்போது இருந்த பேச்சைவிட அதிக பேசுபொருளானதனால் அது தொடர்பான உரித்து ஆவணம் தேடலும் அதிகமாக இடம்பெற்றது.

இவ்வாறு தேடப்பட்டதன் அடிப்படையில் 1930ஆம் ஆண்டு நில அளவைத் திணைக்களம் வரைந்த வரைபடத்தில் 1938 ஆம் ஆண்டு அப்போதைய யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்  அப்போதைய யு.டி.க்கு  பராதீனப்படுத்த வரைபடம் தயாரிக்குமாறு எழுத்தில் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அப்போதை அரசாங்க அதிபர்  வழங்கிய அனுமதியின் பெயரில் ரி.13817 இலக்க நில அளவைத் திணைக்களத்தின் மூலம் தற்போதைய மாநகர சபையும் அப்போதைய நகர அபிவிருத்தி சபையிடம் கையளிக்கப்பட்ட வரைபடம் வெளிப்பட்டுள்ளது.


No comments