இங்கிலாந்தில் ஒமிக்ரோனின் முதல் மரணம்! ஒமிக்ரோன் அலையைத் தடுக்க பூஸ்டர் தடுப்பூசி அவசியம்!!


கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார். இத்தகவலை பிரித்தானியப் பிரதமர் உறுதி செய்துள்ளார். கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளியின் முதல் இறப்பு இதுவாகும்.

தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  அந்த வைரஸ் மற்ற உருமாறிய வைரஸ்களை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

உலகளவில் இதுவரை 63 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ள இந்த சூழலில், இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் தீவிரம் காட்டி வருவதால், அந்நாட்டில் எச்சரிக்கை அளவை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாடு லண்டனில் "தனியான விகிதத்தில்" பரவியுள்ளது. இந்த தொற்று தற்போது சுமார் 40% நோய்த்தொற்றுகளுக்கு காரணமாக உள்ளது. இரட்டை தடுப்பூசி போடப்பட்டவர்கள் கூட இன்னும் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பதால், பூஸ்டர் டோஸ் தடுப்புசிகளை எடுக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே ஒமைக்ரான் வைரஸ் பரவலை அடுத்து இங்கிலாந்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து  பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் ஒமைக்ரான் பேரலை வீசும். அதை தடுப்பதற்காக ஏற்கெனவே போடப்பட்ட தடுப்பூசிகள் பாதுகாப்பு தராது என்று தெரிவித்துள்ளார். 

ஒமைக்ரான் வைரஸ் பரவலை அடுத்து இங்கிலாந்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து  பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் ஒமைக்ரான் பேரலை வீசும். அதை தடுப்பதற்காக ஏற்கெனவே போடப்பட்ட தடுப்பூசிகள் பாதுகாப்பு தராது என கூறினார்.

மேலும் அவர் கூறும் போது 3-வதாக பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டால் ஒமைக்ரான் பாதிப்பு குறையும் என்று அறிவியல் உலகம் கூறுகின்றது. எனவே மக்கள் அனைவருக்கும் ஒரு மாத காலத்திற்குள் இன்னொரு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. பூஸ்டர் டோஸ் போடாவிட்டால் ஒமைக்ரான் பாதித்தவர்களை மருத்துவமனையில்தான் சேர்க்க வேண்டும்.

இப்போது நாம் அவசரநிலையில் இருக்கிறோம். ஒமைக்ரானுடன் நமது போராட்டம் தொடங்கி விட்டது. இந்த நிலையில் 3வது பூஸ்டர் டோஸ் போட்டால் ஒமைக்ரானிடமிருந்து பாதுகாப்பு கிட்டும் என்று விஞ்ஞானிகள் கூறினாலும், இந்த நிலையில் ஒமைக்ரான் தீவிரமானது அல்ல என்று அவர்களால் கூற முடியவில்லை.

ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் மத்தியில் ஒமைக்ரான் படுவேகமாகப் பரவும் என்று விஞ்ஞான உலகம் நம்மை எச்சரிக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3வது பூஸ்டர் டோஸ் அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளது. அதாவது 2வது டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் அதை எடுத்துக் கொண்டு 3 மாத காலம் ஆகியிருக்க வேண்டும் அவர்களுக்குத்தான் பூஸ்டர் டோஸ்.

நாடு முழுதும் 42 ராணுவக் குழு அனுப்பப்பட்டு தடுப்பூசி பணியை விரைவில் நிறைவேற்றுவோம் என்று போரிஸ் ஜான்சன் கூறினார். 

No comments