நயினாதீவில் கடலில் மூழ்கிய முதியவர் சடலமாக மீட்பு


நயினாதீவு 3ஆம் வட்டாரப் பகுதியில் கடலில் மூழ்கி முதியவர் ஒருவர்  இன்று (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தவர், 2ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த நடராஜா தர்மபாலன் (வயது 59) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சென்று விட்டு வருவதாக சென்றவர்,  கடந்த 9 நாள்களாக காணாமல் போயிருந்த நிலையிலேயே, இன்று சடலமாக மீட்கப்பட்டதாக, காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை, ஊர்காவற்றுறைப் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments