மாதகல் கடற்பரப்பில் 275 கிலோ கேரள கஞ்சா மீட்பு


யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் 276 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் கடற்படையினர் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது மாதகல் கடற்பரப்பில் இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டதாக கருதப்படும் 7 மூடை கஞ்சா கடலில் மிதந்த சமயம் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.


இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு எடுத்து வந்துள்ளனர்.

இது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.


No comments