மன்னாரில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு


மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) மாலை, வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

சடலமாக மீட்கப்பட்டவர், புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த, 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் (வயது-51) என்பவர் ஆவார்.

குறித்த நபர், நேற்று 11.30 மணியளவில் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் மன்னார் காவல்நிலையத்தில் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரியவருகின்றது.


No comments