வடக்கிலும் மூன்றாவது தடுப்பூசி!



வடக்கு மாகாணத்தில் 30வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான மூன்றாவது தடவை தடுப்பூசி வழங்கல். தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆவன்னா கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 30வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் முக்கியபங்கு வகிக்கும் தொழிலாளர்கள் மற்றும் நோய்பரவும் ஆபத்துள்ள மக்கள் தொகுதியினருக்கும் (தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களில் பணிபுரிவோர்,சுகாதாரதுறை சாராத முன்னிலை ஊழியர்கள்) மேலதிகமாக மூன்றாவதுதடவையாக கோவிட்-19 தடுப்பூசியானது13ஆம் திகதி திங்கட்கிழமை முதல்; வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் வழங்கப்படவுள்ளது.


மேற்குறிப்பிட்டவர்கள் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்று ஆகக்குறைந்தது மூன்று  மாத இடைவெளியின் பின்னர் இத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம்.


இரண்டு தடவைகள் கோவிட்-19 தடுப்பூசியைபெற்றுக்கொண்டவர்களில் கோவிட்-19 தொற்றிற்கு உள்ளானவர்கள் அவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்ட நாளிலிருந்து 06 மாதகால இடைவெளியின் பின்னர் இத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம்.


எனவே மேற்குறிப்பிட்டவர்களில் சினோபாம் அல்லது  ஏதாவது ஒரு கோவிட்-19 தடுப்பூசியை இரண்டு தடவைகள் பெற்றுக்கொண்டவர்கள் மட்டுமே தமது தடுப்பூசி அட்டையினை சமர்ப்பித்து தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளமுடியும்.


இத் தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் தொடர்பாக அந்தந்த பிரதேசங்களிற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மூலம் மக்களிற்கு அறிவிக்கப்படும்.


அவ்வகையில் மேற்குறிப்பிட்டவர்கள் அந்தந்த பிரதேசங்களிற்குரிய சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனைகளில் அல்லது அவர்களால் அறிவிக்கப்படும் நிலையங்களில் 13. ஆம் திகதி முதலும் மற்றும் தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு மார்கழி மாதம் 18 ஆம் திகதி முதல் பிரதிசனிக்கிழமைகளில் தடுப்பூசி வழங்குவதற்கு யாழ் மாவட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை,ஊர்காவற்துறை,தெல்லிப்பழை,சாவகச்சேரிஆதாரவைத்தியசாலைகளிலும்,கிளிநொச்சி,முல்லைத்தீவு,வவுனியா,மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட பொதுவைத்தியசாலைகளிலும் இத்தடுப்பூசிகள்; வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.30 வயதிற்கு மேற்பட்டவர்களில் அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசிவழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தடுப்பூசிவழங்கும் நிலையத்தில் உள்ள வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments