இந்திய மீனவர் வேட்டை:டக்ளஸ் நன்றி!



இந்திய மீனவர்களை வேட்டையாடும் இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கடற்படையினருக்கு வடக்கு கடற்றொழிலாளர்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் இலங்கையின் கடல் வளத்தையும் பாதிக்கும் வகையில் எல்லை தாண்டி வந்து சட்ட விரோதத் தொழில் முறைகளில் ஈடுபடுகின்ற இந்திய கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கடற்படையினருக்கு வடக்கு கடற்றொழிலாளர்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


No comments