15வருடத்தின் பின்னர் குற்றமற்றவரென கண்டுபிடிப்பு!



கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவரை நிரபராதி என தெரிவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 

மானிப்பாய் வீதி , தாவடியை சேர்ந்த தேவராசா சிவபாலன் (வயது 45) என்பவரே விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 2006ஆம் ஆண்டு ஆயுதங்களை கொழும்புக்கு கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில் , வத்தளை பகுதியில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். 

கைதாக  2 வருட கால விசாரணைகளின் பின்னர் , பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கொழும்பு நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.  

வழக்கு விசாரணைகளுக்காக கடந்த 15 ஆண்டு காலமாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் சிவபாலன் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்.  

இந்நிலையில் கடந்த 14ஆம் திகதி அவருக்கு எதிரான வழக்கில் அவரை  நிரபராதி என தெரிவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுதலை செய்திருந்தது. 


No comments