யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரியாக P.M.C.J.B பளிகேன நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரசாத் பெனான்டோ உதவி காவல் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்று கொழும்பு மாவட்டத்திற்கு பணியிட மாற்றலாகியுள்ளார்.

இந்த நிலையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவி வெற்றிடமாக காணப்பட்டது.

இதற்காக கொழும்பு போக்குவரத்து காவல் பிரிவு தலைமையகத்தில் பணியாற்றிய பளிகேன யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments