தியாகம் போற்றுதும்:தொடங்கியது தடை வருத்தம்!



மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வினை தடுக்கும் முகமாக முல்லைத்தீவு பொலிசாரால் 12 பேருக்கு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது .

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ,தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் பொருளாளருமான அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இழஞ்செழியன்,சமூக செயற்பாட்டாளர் முத்துராசா சிவநேசராசா(கரன்),முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் ,பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன்(முல்லை ஈசன்),சமூக செயற்பாட்டாளர் இசிதோர் அன்ரன் ஜீவராசா , முல்லைத்தீவு மாவட்ட  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி ,சமூக செயற்பாட்டாளர் பேதுருப்பிள்ளை ஜெராட் ,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் ,பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன் ஆகிய பன்னிரெண்டு பேர் மற்றும் இவர்களது  குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது

No comments