திருமலையில் கொள்ளைச் சம்பவம்! மூவர் கைது!!


திருகோணமலை மத்திய வீதியில் உள்ள மகா சேல் கடையில் பணிபுரியும் இருவருடன் மற்றொரு நபரும் இணைந்து பல லட்சம் பெருமதியான பொருட்களை கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்ட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன் கொள்ளைக்கு துணைபோனதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கடையில் பல மாதங்களாக களவு நடைபெற்று வந்துள்ளதாகவும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கைது இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவர்களிடமிருந்து ஒன்றறை இலட்சம் பெறுமதியான பொருட்கள் மீட்கப்பற்றதாக தலைமையகப்காவல்துறையினர் தெரிவித்தனர்.

களவாடப்பட்ட பொருட்களை கொடுத்து போதைபொருட்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், கைதுசெய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 21 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments