அரிசிக்கு கட்டுப்பாடு:காரிற்கு இல்லையாம்!



இலங்கையில்  இறக்குமதி தடைக்கு மத்தியில் 400 சொகுசு வாகனங்கள் கொழும்பு துறைமுகத்தில் தரையிறங்கியது.

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 400 வாகனங்கள் கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டுள்ளன.

குறித்த வாகனங்களின் எண்ணிக்கை பறிமுதல் செய்யப்படுமா இல்லையா என கோரி இலங்கை சுங்க திணைக்களம் நிதி அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு செப்ரெம்பரில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்தத நிலையில்  இந்த வாகனங்கள் ஓடர் செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த வாகனங்கள் இயக்கச் சட்டத்திற்கு முரணாக இருப்பதாகவும் சுங்கத் திணைக்களம் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

துறைமுகத்தில் 300க்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.  பெரும்பாலானவை ஜப்பான் மற்றும் பிரிட்டனில் இருந்து உரிமம் வழங்கும் முறையின் கீழ் இறக்குமதி செய்யப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments