பிரஞ்சுப் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் பெண பலி!
மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் மாலியன் படையினருடன் ஜிகாதி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது ஒரு பெண்ணை சுட்டுக்கொன்றதாக பிரெஞ்சு இராணுவம் இன்று செவ்வாய்க்கிழமை கூறியிருக்கிறது.
குறித்த பெண் நேற்று திங்களன்று ஒரு கூட்டு ரோந்து நடவடிக்கையின் போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இரண்டு நபர்கள் உந்துருளியில் செல்வதை படையினர் அவதானித்தனர் ஆனால் அவர்கள் பிரெஞ்சு மற்றும் மாலியன் படையிரைக் கண்டதும் தப்பியோடினர். படையினரின் துப்பாக்கிச் சூட்டல் பெண் கொல்லப்பட்டார்.
கைவிடப்பட்ட உந்துருளி அருகே துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் இராணுவ பை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது என்று பிஞ்சு இராணுவம் கூறியிருக்கிறது. மேலும் கூறியது.
Post a Comment