கல்முனையில் வாள்வெட்டு!! இனைஞன் படுகாயம்!!


கல்முனை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கல்முனை, மதரஸா வீதியில் இடம்பெற்ற சரமாரியான வாள்வெட்டில் காயமடைந்த கல்முனை இளைஞரன், அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், நேற்று (22) காலை தன்னுடைய வீட்டுக்கு முன்னால் வேகமாக உந்துருளியை ஓட்டிச் சென்றவர்களை நிறுத்தி, வேகமாக வாகனத்தை ஓட்டவேண்டாம் என்று கூறியவர்களுடன் இளைஞர்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து இடம்பெற்றுள்ள சரமாரி வாள் வெட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 19 வயதான முஹம்மத் ஸபான் எனும் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டு வாயில் கதவு போன்றவற்றில் வெட்டுத் தடயங்கள் உள்ளதையும், இரத்த தடயங்கள் உள்ளதையும் அவதானிக்க முடிவதுடன், காணொளியில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இது தொடர்பிலான மேலதிக விசாரணையை கல்முனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments